அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Wednesday, February 6, 2013

அதிரையில் கேபிள் இணைப்புகள் குறித்த கணக்கெடுப்பு தீவிரம் !

அரசு, கேபிள், டிவி நிறுவனம் துவங்கியதையடுத்து, பொதுமக்களுக்கு, 70 ரூபாய் மாத கட்டணத்தில், இணைப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. கேபிள் ஆபரேட்டர்கள், ஒரு இணைப்பிற்கு, 20ரூபாய், அரசுக்கு செலுத்த வேண்டும். மீதமுள்ள, 50 ரூபாய், நிர்வாகச் செலவு மற்றும் லாபத் தொகையாக வைத்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

கேபிள் ஆபரேட்டர்கள், அரசு அறிவித்த தொகைக்கு அதிகமாக, ஒரு இணைப்பிற்கு, 100 ரூபாய் பெற்று வருகின்றனர். இதை, கேபிள், டிவி நிர்வாகத்தால், கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும், தங்களிடம் உள்ள இணைப்புக்களை கணக்கில் காட்டாமல், குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புக்களே, தங்களிடம் உள்ளதாக கூறி, அரசு கேபிள், டிவி நிர்வாகத்திற்கு, இழப்பு ஏற்படும் வகையில், மாத தொகையை குறைவாகவே செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஆபரேட்டரிடமும் உள்ள இணைப்புக்களை முழுமையாக கணக்கெடுத்து வசூலித்தால், அரசுக்கு இழப்பு தவிர்க்கப்பட்டு கூடுதல் வருவாய் கிடைக்கும் என கருதப்பட்டது.
கேபிள் டிவி இணைப்பு குறித்து கணக்கெடுக்கும்படி ரேஷன் ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் இதற்கான படிவம் அச்சடிக்கப்பட்டுள்ளது. கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம், படிவத்தை கொடுத்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த படிவத்தில், குடும்ப தலைவரின் பெயர், முகவரி, கேபிள் இணைப்பு உள்ளது என்றால் அந்த ஆபரேட்டரின் பெயர் மற்றும் முகவரி, டிடிஎச் இணைப்பு உள்ளதா, மாதாந்திர கேபிள் கட்டணம் எவ்வளவு? எத்தனை சேனல்கள் தெரிகிறது ? சேனல்கள் தெளிவாக தெரிகிறதா என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. 
கேபிள் டிவி இணைப்பு குறித்து கணக்கெடுத்து படிவத்தை விரைவில் ஒப்படைக்கும்படி, ரேஷன் ஊழியர்களுக்கு வட்ட வழங்கல் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment