அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Wednesday, February 6, 2013

அதிரையில் கட்டிமுடித்தும் திறக்கப்படாமல் உள்ள சுகாதார வளாகம் !

அதிரை தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி கீழத்தெரு. இந்த பகுதியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு 2011-2012 ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 9 லட்சம் ஒதுக்கீட்டில் ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் நவீன வசதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த வளாகம் கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்படுத்தும் நோக்கில் திறக்கப்படாமல் இருப்பது இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
இந்த சுகாதார வளாகத்தை அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து திறப்பதற்குரிய முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா !?

No comments:

Post a Comment