அன்புள்ள சகோதர்களே பல வருடம்களாக இயங்காமல் இருந்த நமது தீ அதிரை நியூஸ் தளம் இன்னும் பொலிவுடன் .காம் ஆக விரைவில்

தொடர்புக்கு: theadirai@gmail.com

Monday, February 25, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம் !


அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் [ 24-02-2013 ] ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொழில் முனைவோருக்கான ஊக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முகாம் இயக்குனர் முனைவர் P. சிலார் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்கள் தலைமையுரையாற்றினார். வணிகவியல் துறை தலைவர் முனைவர் M. சீனி கமால் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 

இதில் சிறப்பு பேச்சாளர்களாக முனைவர் R. விஜயலெட்சுமி, வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சீதாலெட்சுமி [ ராமசாமி கல்லூரி,  திருச்சி ] மற்றும் முனைவர் E. முபாரக் அலி இணைப்பேராசிரியர் வணிகவியல் துறை, [ ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி ] ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை தொழில் முனைவோராக்க ஆலோசனை வழங்கினர்.

இறுதியில் இக்கல்லூரியின் வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் A. பீர் முகைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். இம்முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment